Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
- குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
- நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
- “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
- இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
- எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
Author: NEWS DESK
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வின் பகுதியாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 18 ஆகஸ்ட் 2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார். https://youtu.be/ubbJR5rOrZ4 வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவில் பதிக்கப்பட்ட அதில் ஒரு நாணயத்தை திமுக செயல் உறுப்பினர்களான ஷஃபீக் மற்றும் டேவிட் ஆகியோர் பஹ்ரைனுக்கு கொண்டு வந்து, பஹ்ரைன் தமிழ் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களை பார்வையிடச் செய்தார். “தமிழ் வெல்லும் “ என்ற வாசகத்துடன் கூடிய 100 ரூபாய் நாணயம் கட்சி பாகுபாடின்றி தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் பெருமை படக்கூடிய விடயம் என கருத்து தெரிவித்த அவர் , பஹ்ரைன் வாழ் தமிழர்களின் பார்வைக்கு கொண்டு வந்த ஷபீக்…
ஜம்மு காஷ்மீர்: மேலும் 29 வேட்பாளர்களை அறிவித்தது! இன்னும் எத்தனை போராட்டம் வெடிக்க போகுதோ?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று அறிவித்தது. இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 2-வது மற்றும் 3-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாஜகவின் முந்தைய வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் ஶ்ரீநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் தற்போதைய பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் பாஜக தனித்தே களம் காண்கிறது. காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- சிபிஎம்- பேந்தர்ஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியும் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஜம்மு…
BTEA இயக்குநர்கள் குழு, Q2 2024க்கான சாதனைகள் மற்றும் திட்டங்களை மதிப்பாய்வு செய்கிறது, எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறது
BTEA – மனாமா, பஹ்ரைன் இராச்சியம் (25 ஆகஸ்ட் 2024): சுற்றுலா அமைச்சரும், பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சிகள் ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மேன்மைமிகு திருமதி பாத்திமா பின்ட் ஜாபர் அல் சைராஃபி, 2024 ஆம் ஆண்டின் BTEA இன் இரண்டாம் காலாண்டு வாரியக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 2022-2026 சுற்றுலா மூலோபாயத்தின் குறிக்கோள்கள் மற்றும் தூண்களை செயல்படுத்துவது தொடர்பான சாதனைகள் மற்றும் குறிகாட்டிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்து, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுற்றுலாத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களை வாரியம் மதிப்பாய்வு செய்தது.இரண்டாவது காலாண்டில் தொடங்கப்பட்ட முக்கிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் ராஜ்யத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதில் அவற்றின் நேர்மறையான தாக்கம் ஆகியவையும் கூட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. 2022-2026 சுற்றுலா மூலோபாயத்தின் இலக்குகளை அடைய பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதிகாரசபையின் உறுதிப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் துறையின் பங்களிப்பை இரட்டிப்பாக்குதல்…
அமைதியான சகவாழ்வுக்கான கிங் ஹமாத் விருதை அறிமுகப்படுத்தியதற்கு டாக்டர் ஷேக் அப்துல்லா பின் அகமது பாராட்டு
அமைதியான சகவாழ்வுக்கான கிங் ஹமத் குளோபல் சென்டரின் தலைவரான டாக்டர் ஷேக் அப்துல்லா பின் அஹ்மத் அல் கலீஃபா, அமைதியான சகவாழ்வுக்கான கிங் ஹமாத் விருதை அவரது மாட்சிமை பொருந்திய மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவின் உலகளாவிய முயற்சியாக நிறுவியதை பாராட்டினார். தேசிய பட்டய நினைவுச்சின்னத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர் ஷேக் அப்துல்லா, விருதின் மனிதாபிமான பரிமாணங்களை வலியுறுத்தினார்.அமைதியான சகவாழ்வு, கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் தீவிரவாதம் மற்றும் வெறுப்பை நிராகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பஹ்ரைனின் நீண்டகால பாரம்பரியம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவற்றிலிருந்து இந்த விருது பெறப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பில் திரு. அப்துல்லா இசா அல்மனை, டாக்டர் அல்சாடிக் ஒமர் கலஃபல்லா மற்றும் சுசில் முல்ஜிமால் ஆகியோரும் கலந்து கொண்டனர். டாக்டர் ஷேக் அப்துல்லா, அமைதியான சகவாழ்வுக்கான கிங் ஹமாத் குளோபல் சென்டரின் அறங்காவலர் குழுவின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை எடுத்துரைத்தார்,…
நியூயார்க்: இந்தியா-அமெரிக்கா உறவில் சமீப காலமாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆயுத பரிவர்த்தனையில் இரு நாடுகளும், தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவுக்கு நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தியாவின் ஆயுத கூட்டாளி என்றால் அது ரஷ்யாதான். இப்போ இல்லை.. இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது. அதற்கேற்றார்போல, ரஷ்யாவும் தரமான சம்பவம் செய்யும் ஆயுதங்களைதான் கொடுக்கும். இதனுடைய லைஃப் டைமும் அதிகம். எனவே போர் விமான இருந்தாலும் சரி, போர் ஆயுதமாக இருந்தாலும் சரி நாம் முதலில் சென்று நிற்கும் இடம் ரஷ்யாதான். ஆனால், பாதுகாப்பு விஷயங்களுக்கு ஒரே நாட்டை மட்டும் நம்பியிருப்பது என்பது புத்திசாலித்தனம் அல்ல. எனவே இந்தியா கடந்த சில ஆண்டுகளில் தனது ஆயுத கொள்முதல் தளத்தை விரிவுப்படுத்தியது. இப்படித்தான் பிரான்ஸின் ரபேல் விமானம் வாங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் தரம்…
சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவும் 3 வாரங்களில் பதில் அளிக்க கோர்ட் கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாலை அமைப்பது தொடர்பான அறிவிப்பில் 3 கிலோ மீட்டர் 15 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே சாலை அமைப்பதாக கூறியிருந்தாலும், உண்மையில், திருமூர்த்தி மலைக்கும், குருமலைக்கும் இடையிலான தூரம் 8 கிலோ மீட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு…
பஹ்ரைன் இராச்சியத்தில் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கான இந்திய பெண்கள் சங்கத்தின் ஆண்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள்
இந்தியப் பெண்கள் சங்கம் (ILA) செப்டம்பர் 2024 இல் பேசும் ஆங்கிலத்தில் அடிப்படைத் தொடர்புத் திறன்களுக்கான வருடாந்திர வகுப்புகளைத் தொடங்குவதாக அறிவிக்கிறது.இந்த பாடநெறி விலையுயர்ந்த பயிற்சி நிறுவனங்களை வாங்க முடியாத நபர்களை குறிவைக்கிறது.இந்த பாடத்திட்டமானது ILA இன் பல சமூக நலன் திட்டங்களில் ஒன்றாகும் மற்றும் SpeakEasy துணைக்குழு உறுப்பினர்களான டாக்டர் ரூபி தாமஸ் மற்றும் நிஷா மரோலி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கும் பாடநெறி இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும், வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு முறை நடைபெறும்.பாடநெறியின் முடிவில், உயரதிகாரிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும், அங்கு அவர்கள் புதிதாக பெற்ற திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் பெறுவார்கள்.இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பங்கேற்பாளர்கள் ஆங்கிலத்தில் அடிப்படை தகவல் தொடர்பு திறன்களைப் பெற உதவுவது, அவர்கள் வேலையிலும் அவர்களின் சமூக தொடர்புகளிலும் மிகவும் திறம்பட செயல்பட உதவுவதாகும். திறமையான ஆசிரியர்கள் தங்கள் நேரத்தை தன்னார்வத் தொண்டு…
அவன் நல்லவனே இல்லை.. “கூட்டாளிகளுக்கும் தொடர்பு!” கொல்கத்தா டாக்டர் கொலை- கைதான நபரின் மாமியார் பரபர
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் மாமியார் சில பகீர் தகல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது சஞ்சய் நல்லவன் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதேநேரம் இந்த குற்றத்தை அவன் தனியாகச் செய்திருக்க முடியாது என்றும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த ஆக. 8ம் தேதி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவர் கொலை: இந்தச் சம்பவத்தில் போலீசார் இதுவரை ஒருவரைக் கைது செய்துள்ளனர். அதேநேரம் இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய்…
மருமகனை காப்பாற்ற ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் கவலையில்லை.. ஆனால்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சென்னை : சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்; புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில மந்திரிகளைக் காப்பாற்றவும் ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் கவலையில்லை என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் திருமணவிழாவில் பேசியதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமண விழாவில் பேசியதற்கு பதிலடி கொடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது “‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா’ என்று, நம்மை எல்லாம் ஆளாக்கிய புரட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்பதோடு, அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார். ‘Go Back Modi’…
தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக்.. உயரும் பேருந்து கட்டணம்? இரக்கமே இல்லையா உங்களுக்கு? பறந்த கோரிக்கை.!
சென்னை: பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் கட்டணம் மற்றும் வரி உயர்வால் பாதிகப்பட்டு வரும் ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மூன்று கட்டங்களில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக வீடுகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு…
