Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    April 3, 2025

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
    • இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
    • எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
    • ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் அறிவித்த கோவை ஐடி நிறுவனம் – ஒவ்வொருவருக்கும் ஆண்டு சம்பளத்தில் 50%
    • டெல்லியில் சரிகிறது ஆம் ஆத்மி ஆட்சி.. அரியணை ஏறும் பாஜக.. 2013க்கு பின் ஆட்சி மாற்றம் – எக்சிட் போல்
    • போக்சோ வழக்கு: “அவர் என் கணவர்.. அவருடன்தான் வாழ்வேன்” பெண் வாதத்தால் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    • இந்திய பெண்கள் சங்கம் (ILA) மற்றும் தட்டாய் இந்து வணிகர்கள் சமூகம் (THMC) ஒரு மூலோபாய கூட்டுறவை உருவாக்குகின்றன
    • பஹ்ரைன் இராச்சியத்தின் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பாரதி சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது.
    Facebook X (Twitter) Instagram
    Starvision News TamilStarvision News Tamil
    Demo
    • Home
    • World
    • Bahrain
    • Tamil Nadu
    • Technology
    Starvision News TamilStarvision News Tamil
    Home » “சமூகநீதியை புதைத்துவிட்டு.. போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமையை தமிழக அரசு நசுக்குகிறது”:ராமதாஸ்
    Breaking News

    “சமூகநீதியை புதைத்துவிட்டு.. போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமையை தமிழக அரசு நசுக்குகிறது”:ராமதாஸ்

    NEWS DESKBy NEWS DESKJuly 27, 2024Updated:July 27, 2024No Comments
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. ஆனால் இதை மீறி தற்போது இந்த நியமனத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதில் தற்போதைய நிலவரப்படி 3000 பேருந்துகள் மட்டுமே தினமும் இயக்கப்படுவதாகவும் மற்ற பேருந்துகள் பணியாளர்கள் பற்றாகுறையால் இயக்கப்படாமல் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதில் தற்போதைய நிலவரப்படி 3000 பேருந்துகள் மட்டுமே தினமும் இயக்கப்படுவதாகவும் மற்ற பேருந்துகள் பணியாளர்கள் பற்றாகுறையால் இயக்கப்படாமல் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில், மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப டெண்டர் வெளியிட்டுள்ளார். இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

    “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1200 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்து, அதற்கேற்ற ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டிய தமிழக அரசே, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, சமூகநீதியை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது.

    சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில், 700 ஓட்டுனர்களையும், 500 நடத்துனர்களையும் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகளும், தொழில்நுட்பப் புள்ளிகளும் கோரப் பட்டுள்ளன. அதாவது, மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான ஓட்டுனர்கள், நடத்துனர்களை மாநகரப் போக்குவரத்துக் கழகமே தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மனிதவள நிறுவனம் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் பயன்படுத்திக் கொள்ளும். அவர்களுக்கான ஊதியத்தை நிரந்தர பணியாளர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதைவிட குறைவான அளவில் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் வழங்கும்.

    மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழங்கும் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு வழங்கும். இது வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது. இவற்றை விட பெரிய அநீதி, தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நியமனங்களில் எந்த வகையான இட ஒதுக்கீடும் வழங்கப்படாது. மொத்தத்தில் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்கும் போது சமூக நீதியும், தொழிலாளர்களின் உரிமைகளும் நிரந்தரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்.

    தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் & நவம்பர் மாதங்களில் இதே மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ”இது அபாயகரமான சோதனை. தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப் பட்டால், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது. அவர்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும். இந்த முறையை கைவிட்டு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை, நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்” எனத் தீர்ப்பளித்தது.

    அதன்பிறகும் திருந்தாத தமிழக அரசு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மீண்டும் கோரியுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்க அரசு தயாராக இல்லாததையே இது காட்டுகிறது.

    சமூகநீதிக்கு எதிரான குத்தகை முறையில் 1200 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நியமிக்கப்படும் போது இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய 318 வேலைவாய்ப்புகளும், இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வேண்டிய 42 வேலைவாய்ப்புகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 240 வேலைவாய்ப்புகளும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு கிடைக்க வேண்டிய 228 வேலைகளும் பறிக்கப்படும். இந்த அநீதியை அரங்கேற்றும் திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதியுண்டா?

    தொழிலாளர் உரிமையும், சமூக நீதியும் தெருவில் கிடந்து எடுக்கப்பட்டவையல்ல. இட ஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் எண்ணற்றவை; இந்தப் போராட்டத்தில் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் கணக்கில் அடங்காதவை. அதேபோல், அதிகார வர்க்கத்தினரால் சுரண்டப்படும் தொழிலாளர் உரிமையை மீட்டெடுப்பதற்காக உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் பயனாகவே 8 மணி நேர பணியும், பிற தொழிலாளர் உரிமைகளும் தொழிலாளர்களால் வென்றெடுக்கப் பட்டன. அவற்றின் சாட்சியாகவே செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாளும், மே ஒன்றாம் தேதி பாட்டாளிகள் நாளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், போராடிப் பெற்ற இரு உரிமைகளையும் திமுக அரசு, கொடூரமாக பறித்திருக்கிறது. இதை விட கொடிய சமூக அநீதியை எவரும் இழைக்க முடியாது. இதன் மூலம் தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு பதிலாக சமூகநீதி நாளான செப்டம்பர் 17&ஆம் தேதியையும், தொழிலாளர்கள் நாளான மே ஒன்றாம் தேதியையும் கருப்பு நாளாக அறிவித்து விடலாம். தொழிலாளர்களின் உரிமைகளையும், சமூகநீதியையும் படுகொலை செய்து வரும் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.

    starvision tamil news ஸ்டார்விஷன் தமிழ் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    NEWS DESK

    Related Posts

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    April 3, 2025

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025

    Leave A Reply Cancel Reply

    Starvision
    Top Posts

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023

    பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? – மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

    October 30, 2023
    Don't Miss
    Breaking News

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    By NEWS DESKApril 3, 2025

    டெல்லி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியதாக மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான…

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025

    ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் அறிவித்த கோவை ஐடி நிறுவனம் – ஒவ்வொருவருக்கும் ஆண்டு சம்பளத்தில் 50%

    February 5, 2025
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Starvision
    About Us
    About Us

    StarVision News as we provide you with a global perspective on the issues and stories that matter most, connecting you to the pulse of the planet in real-time.

    Email Us: info@starvisionnews.com
    Contact: +973 36219358

    Facebook X (Twitter) Instagram YouTube
    Our Picks

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    April 3, 2025

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025
    Most Popular

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023
    © 2025 Starvision Global Designed by Starvision Global.
    • Home
    • Politics
    • Lifestyle
    • Science

    Type above and press Enter to search. Press Esc to cancel.