Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
- “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
- இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
- எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
- ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் அறிவித்த கோவை ஐடி நிறுவனம் – ஒவ்வொருவருக்கும் ஆண்டு சம்பளத்தில் 50%
- டெல்லியில் சரிகிறது ஆம் ஆத்மி ஆட்சி.. அரியணை ஏறும் பாஜக.. 2013க்கு பின் ஆட்சி மாற்றம் – எக்சிட் போல்
- போக்சோ வழக்கு: “அவர் என் கணவர்.. அவருடன்தான் வாழ்வேன்” பெண் வாதத்தால் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
- இந்திய பெண்கள் சங்கம் (ILA) மற்றும் தட்டாய் இந்து வணிகர்கள் சமூகம் (THMC) ஒரு மூலோபாய கூட்டுறவை உருவாக்குகின்றன
Author: NEWS DESK
ஜல்லிக்கட்டு ஒரு சனாதனத் திருநாள்! கலித்தொகையைச் சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் கருத்து!
கலித்தொகையில் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் இருப்பதாக டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் எழுதிய ட்விட்டர் பதிவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள் என்ற தலைப்பில் கிருஷ்ணன் என்பவர் ட்விட்டரில் எழுதிய பதிவில், “சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் விழாவைப் பற்றி கலித்தொகை விரிவான குறிப்புகளைத் தருகிறது. முதலில் தெய்வ வழிபாடு செய்த பிறகே விழா தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் அல்ல” என்று எழுதியுள்ளார். இந்தப் பதிவை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்து தனது கருத்தையும் கூறியுள்ளார். அதில், “கலித்தொகையில் பல உருவகங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆபரணங்கள், சின்னங்கள், தனித்துவமான அம்சங்கள் என போன்றவை எல்லாம் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் ஆகியோருடன் தொடர்புடையவை. அவை அந்தக் கால மக்களின் வாழ்க்கையின் அங்கமாக இருந்தன.” என்று குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/nsitharaman/status/1747149092558647309?s=20 “அந்த காலகட்ட வாழ்க்கையை வேறுபடுத்திப் பார்ப்பது குறும்புத்தனமானது, தவறான நோக்கமும், பிரிவினைவாதமும் ஆகும் என்று டி.எஸ்.கிருஷ்ணன் காட்டுகிறார்” எனவும்…
இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து மாலத்தீவும்m, இந்தியாவும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக இந்திய துருப்புகளை அகற்ற மாலத்தீவுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. மாலேவில் உள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக சன்ஆன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் துபாயில் நடந்த COP28 மாநாட்டுக்கு இடையே, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பின் போது மாலத்தீவுகளும் இந்தியாவும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புக் கொண்டதன் தொடர்ச்சியாக, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் இப்ராஹிம் கலீல் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது குறித்தும், மாலத்தீவில் இந்தியா ஆதரவுடன் கூடிய வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் உயர்மட்ட குழு ஆலோசித்து வருவதாக…
அயல் நாட்டிலும் அமோக வரவேற்பு.. தனுஷுக்கு புதிய பெருமையை தேடித்தந்த கேப்டன் மில்லர் – அது என்னனு தெரியுமா?
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன், இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது கேப்டன் மில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட திரை உலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் காலத்தில் நடக்கின்ற ஒரு கதைக்களம் கொண்டு அமைக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி உள்ளது அனைவரும் அறிந்தது. இந்த பொங்கலுக்கு வெளியான அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படமும் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விநியோகித்துள்ள பிரபல லைகா நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலின் படி வெளிநாட்டில் தனுஷ்…
அண்ணாமலை பகல் கனவு காண வேண்டாம்: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் – தமிழக அரசு பதிலடி!
வெகு விரைவில் முன்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக அரசு, அண்ணாமலை அவர்கள் பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டு வந்திருக்கிறது. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில் இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் முன்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை…
பஹ்ரைனின் சமூக விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பாரதி அசோசியேஷன், அதன் வருடாந்திர நிகழ்வான பொங்கல், தமிழ்நாடு அறுவடைத் திருவிழாவை வெள்ளிக்கிழமை ஜனவரி 12, 2024 அன்று தி இந்தியன் கிளப்பில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. https://youtu.be/RcTl57H-X38?si=6qiEjbHt2KwMp8kA அவர்.இந்திய தூதர் வினோத் கே.ஜேக்கப் தலைமை வகிக்கிறார் உலகளவில் புலம்பெயர்ந்த தமிழர்களால் கொண்டாடப்படும் மற்றும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் ஒன்றாகும்.தி இந்தியன் கிளப்பில் கடந்த 24 ஆண்டுகளாக பாரதி சங்கம் பொங்கல் விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறது. விழா கொண்டாடப்படும் வளாகம் மா இலைகள், இலைகளுடன் கூடிய மஞ்சள் கொத்து மற்றும் மென்மையான தேங்காய் இலைகளால் முழுமையாக உயிர்ப்பிக்கப்படும்;அழகான ‘கோலம்’ வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட தரை;வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில், பழங்கள், கரும்புகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சடங்குகளின் சிறப்பம்சமாக, நேரடி சமையலுக்கு வரிசையாக அலங்கரிக்கப்பட்ட பானைகள் இருக்கும், அதில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி பால் மற்றும் வெல்லத்துடன் நிரம்பி…
BIC, வரலாற்று சிறப்புமிக்க ஃபார்முலா 1 பஹ்ரைன் GP 2024 இல் ’20 வருட நவீன தரமான’ கொண்டாடுகிறது
பஹ்ரைன் இன்டர்நேஷனல் சர்க்யூட் ஃபார்முலா 1 வளைகுடா ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் 2024 க்கு உற்சாகமான முன்னணியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது – இது F1 இல் பஹ்ரைனின் மைல்கல் 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ஒரு வரலாற்று நிகழ்வு. பிப்ரவரி 29 முதல் மார்ச் 2 வரை நடைபெறவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டார் ஸ்போர்ட் மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளுக்கான அருமையான திட்டங்களில், ’20 இயர்ஸ் ஆஃப் எ மாடர்ன் கிளாசிக்’ நினைவூட்டும் பிரச்சாரம், மூன்று நாட்கள் இடைவிடாத பந்தயங்கள் மற்றும் குடும்ப வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு F1 காட்சியானது மூன்று நாட்கள் உலகத் தரம் வாய்ந்த பந்தயத்தின் மூலம் தலைப்புச் செய்தியாக அமைக்கப்பட்டுள்ளது, இது முழு குடும்பத்திற்கும் நம்பமுடியாத ஆஃப்-டிராக் ஈர்ப்புகளின் வண்ணமயமான கலவையால் நிரப்பப்படுகிறது. தொடக்க விழாவில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர், மாண்புமிகு பாத்திமா பின்ட் ஜாஃபர் அல் சைராஃபி, BIC தலைமை…
தமிழக வரலாற்றில் முதல் முறை.. தீயணைப்பு துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி பிரியா – IAS அதிகாரியாக நியமனம்!
யார் இந்த பிரியா ரவிச்சந்திரன் கடந்த 1999 ஆம் ஆண்டு பொதுச் சேவை தேர்வை எழுதி தனது 26 ஆவது வயதில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணியாற்ற துவங்கினார் பிரியா ரவிச்சந்திரன், இவருடைய சொந்த ஊர் சேலம். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீயணைப்புத் துறையில் பயணித்து வருகின்றார். தீயணைப்பு துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து வரும் பிரியா ரவிச்சந்திரன் மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக இப்பொழுது அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முதலில் தனது பணியை நாகைபட்டினத்தில் நான் பிரியா தூங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களில் மண்டல…
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கடிதம் வழங்கி உள்ளார். இருவரின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 35 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் உடல்நலன் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து கடிதம் ஒன்றை ஸ்டாலினிடம், ராமதாஸ் வழங்கினார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் தேவையையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி , தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் (டிச.4) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நீர் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் டிச.11ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் முதல்கட்டமாக ரூ.5060 கோடி நிவாரணத் தொகையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியிருந்தார். தொடர்ந்து, நிவாரணத் தொகையாக மத்திய அரசு ரூ.480 கோடி விடுவித்தது. தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு நடத்தியது. இந்த நிலையில், இன்று மத்திய குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, ‘புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி வழங்கிட வேண்டும்”…
லெப்டினன்ட் ஜெனரல் டாக்டர் ஷேக் முகமது பின் அப்துல்லா அல் கலீஃபா, சுப்ரீம் கவுன்சில் ஃபார் ஹெல்த் (எஸ்சிஎச்) தலைவர், பஹ்ரைன் அனைத்து மட்டங்களிலும் அதன் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு சரியான பாதையில் செல்கிறது என்பதை உறுதிப்படுத்தினார், தொடர்ந்து சேவை செய்ய சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.மாட்சிமை மிக்க மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவின் தலைமையில், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா அவர்களால் ஆதரிக்கப்படும் விரிவான வளர்ச்சி செயல்முறை. வடக்கு கவர்னரேட்டின் சல்மான் சிட்டியில் “ஹுசைன் அலி யதீம் ஹெல்த் சென்டருக்கு” அடிக்கல் நாட்டும் போது, SCH தலைவர் அலி & முகமது யதீம் நிறுவனத்தின் ஆதரவிற்கும், நோயாளிகளுக்கு உடல்நலம் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தார்.அதன் சமூகப் பொறுப்பின் கட்டமைப்பிற்குள். கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர். ஜலீலா…