Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
- குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
- நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
- “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
- இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
- எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
Author: NEWS DESK
மனாமா: பிருந்தாவனி டான்ஸ் அகாடமி, ஸ்டார்விஷன் ஈவென்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் மே 3ம் தேதி பரதநாட்டியத்தில் அறிமுகமாகிறது. https://youtu.be/TFHzKc3pnQo பஹ்ரைன் கலாச்சார மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும்.அத்விகா, அஷ்வின், அக்ஷரா அஷ்வின், தேஸ்னா பிரவீன் குமார், திஷா மங்கல்பாடி, நேத்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ரித்திகா பிரபு ஆகியோர் பஹ்ரைன் மற்றும் தமிழகத்தின் பிரபல நடனக் கலைஞரான ஹன்சுல் கனியின் பயிற்சியில் அறிமுகமாகிறார்கள்.தவானி, அல் ஜசீரா குழுமத்தின் தலைவர் அப்துல் ஹுசைன் கலீல் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றனர். ரெட் ஹவுஸ் மார்க்கெட்டிங் தலைவர் ஜார்ஜ் எஃப் மிடில்டன், ஸ்டார்விஷன் ஈவென்ட்ஸ் & மீடியா குரூப் சேர்மன் சேதுராஜ் கடக்கல், நியூ மில்லினியம் முதல்வர் அருண்குமார், ஆசிய பள்ளி முதல்வர் மோலி மோமன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
மனாமா: பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் அளிப்பதோடு, அப்பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கவும், போரை விரிவுபடுத்தவும் அச்சுறுத்தும் வகையில், பிராந்தியத்தில் ராணுவ அதிகரிப்பு குறித்து பஹ்ரைன் இராச்சியம் கவலையுடன் பின்தொடர்கிறது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்தகைய அதிகரிப்பின் கடுமையான பின்விளைவுகளிலிருந்து பிராந்திய மக்களைக் காப்பாற்றுவதற்காக, தீவிரத்தை தணிக்கவும், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் தேவை என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார் சென்னையில் இன்று (ஏப்.14,2024) செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, “நான் ராயப்புரத்தில் தோற்க பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததே காரணம்” என்றார். இது குறித்து பேசிய அவர், “பாரதிய ஜனதா உடன் கூட்டணி வைத்ததால்தான் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தோற்றோம். ராயப்புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நான் முடிசூடா மன்னனாக திகழ்ந்தேன். பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன்.அது ஒரு ஓடாத சைக்கிள், பைக். அ.தி.மு.க.வின் தோல்விக்கு பாரதிய ஜனதா தான் காரணம். நான் தேர்தலில் நிற்கும்போத சிறுபான்மையினர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். அவர்களுக்கு என் மீது கோபம் கிடையாது. பாரதிய ஜனதா கட்சி மீதுதான் கோபம். பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால், ராயப்புரத்தில் உள்ள 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க.வுக்கு சென்று விட்டன.நான் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்தேன். ஆனால் திமுக 40 ஆயிரம்…
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை-திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயிலில் பயணித்த சென்னை அகரத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ், எஸ்.நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த எஸ்.பெருமாள் ஆகிய 3 பேரிடம் இருந்து ரூ.3.98 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின்போது சதீஷ், தான் சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் ஊழியர் என்றும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் போலீசாரிடம் கூறினார். சதீஷ் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும், நயினார் நாகேந்திரனின் அடையாளச் சான்றிதழின் நகலும் அவரிடம் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, சென்னை மற்றும் திருநெல்வேலியில் சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணம்…
ரூ10.76 லட்சம் கோடி தமிழகத்திற்கு தந்தீர்களா? எத்தனை பொய்களை நாடு தாங்கும்? மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு… இது அப்பட்டமான பொய்க்கணக்கு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தமது X தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வரி பகிர்வு, மழை நிவாரண நிதி ஒதுக்கீடு என தமிழ்நாடு அரசு- மத்திய பா.ஜ.க அரசு இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X பதிவில், “கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு… இது அப்பட்டமான பொய்க்கணக்கு. இதில் இரண்டு கூறுகள் உள்ளன: 1. ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது…
மனித உரிமை கலாச்சாரத்தை ஒருங்கிணைப்பதில் NIHR தலைவர் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்
மனாமா: மனித உரிமைகளுக்கான தேசிய நிறுவனம் (NIHR) இன் தலைவர் அலி அஹ்மத் அல் டெராசி, மனித உரிமைகள் கலாச்சாரத்தை மேம்படுத்துவதிலும் ஒருங்கிணைப்பதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை அடைவதிலும், தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் நிறுவனத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். தேசிய செயல் சாசனம் (என்ஏசி) அங்கீகரிக்கப்பட்டதன் 23வது ஆண்டு விழாவில் பஹ்ரைன் செய்தி நிறுவனத்திற்கு (பிஎன்ஏ) அல் டெராசி அளித்த அறிக்கையில், அந்தஸ்தை மேம்படுத்துவது தொடர்பான அவரது மாட்சிமை மிக்க மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவின் பார்வையை அடைய NIHR உறுதிபூண்டுள்ளது என்றார்.மனித உரிமைகள், செயல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது மனித உரிமைகளுக்கான தேசிய நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளை அல் டெராசி கோடிட்டுக் காட்டினார், இதில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி, கண்காணிப்பு, சட்டப் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை வழங்குதல், தேசிய மனித உரிமைகள் திட்டத்தை வகுப்பதில் பங்கேற்பது மற்றும் மனித உரிமைகள் கலாச்சாரத்தை ஊக்குவித்தல். 2014 இல் வளைகுடா ஒத்துழைப்பு…
இந்தியாவில் மொத்தம் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!
மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அந்த பதிலில் கூறியிருப்பதாவது: “2024, ஜனவரி 31 நிலவரப்படி, 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன. இவை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட கட்டமைப்புக் கொண்ட மாநிலங்களை இணைக்கின்றன. இது தவிர, ரயில் சேவைகளை நிறுத்துவது, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை இந்திய ரயில்வேயில் நடந்து வரும் செயல்பாடுகளாகும். தற்போது டெல்லி-மும்பை (வதோதரா-அகமதாபாத் உட்பட) மற்றும் டெல்லி-ஹவுரா (கான்பூர்-லக்னோ உட்பட) வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோ…
லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதியாகக் கொடுத்த டிஜேபி.. ஆம் ஆத்மிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை..
டெல்லி ஜல் போர்டின் (டிஜேபி) முன்னாள் தலைமைப் பொறியாளர் ஒருவர், டிஜேபியின் விவகாரங்களை நிர்வகிப்பவர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் (ஏஏபி) தொடர்புடையவர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு லஞ்சமாகப் பெற்ற பணத்தை அனுப்பியது விசாரணைகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை தெரிவித்தது. டெல்லி ஜல் போர்டு ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி, வாரணாசி மற்றும் சண்டிகரின் பல்வேறு இடங்களில் மத்திய நிறுவனம் சோதனை நடத்திய ஒரு நாள் கழித்து இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அமலாக்கத்துறையின்படி, லஞ்சப் பணம் ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதியாக அனுப்பப்பட்டது. சோதனையின் போது, 1.97 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், 4 லட்ச ரூபாய்க்கு சமமான வெளிநாட்டு கரன்சி, பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. டிஜேபியில் ஊழல் அல்லது லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்காக சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.…
“இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகள்.. மீண்டும் கிண்டப்பட்ட ஆல்வா” – மத்திய அரசை சாடும் உதயநிதி!
இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 – 25ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை அறிவித்தார். இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி அவர்களை புகழ்ந்து பல தகவல்களை வெளியிட்டார். அதே நேரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பட்ஜெட் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்”. “இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க – பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த – மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்”. “ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான்…
“இந்தியா வளர்ந்த நாடாக மாற அடுத்த படி”.. இடைக்கால பட்ஜெட் 2024 – 25 – பிரதமருக்கு புகழாரம் சூட்டிய அண்ணாமலை!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் “மக்களை காக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி” என்ற தலைப்பில் பல விஷயங்களை மேற்கோள் காட்டியுள்ளார். மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சியில் உலக அளவில் இந்தியா இன்று முதன்மை நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருப்பதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுவதும் நமது பிரதமரின் ஊழலற்ற நல்லாட்சிக்கான சாட்சி. கடந்த பத்து ஆண்டுகளில் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு துறை, தொழில்துறை, சுற்றுலாத்துறை, நாட்டின் உட் கட்டமைப்பு வசதிகள் என அனைத்து துறைகளும் பல மடங்கு முன்னேறி இருக்கின்றன. சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் போக்குவரத்து வசதிகள் இன்றி, மின்சாரம் இன்றி இருந்து கிராமங்கள் அனைத்திலும் இன்று அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக காஷ்மீர் மற்றும் வடகிழக்கு…
