Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
- குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
- நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
- “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
- இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
- எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
Author: NEWS DESK
தேசிய சுற்றுலா புள்ளியியல் அமைப்பை மேம்படுத்துவதில் இராச்சியத்தின் அனுபவத்தை எடுத்துக்காட்டுகிறது… பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சிகள் ஆணையம் மஸ்கட்டில் 2வது அரபு சுற்றுலா புள்ளியியல் மன்றம் 2024 இல் பங்கேற்கிறது
மஸ்கட், 16 அக்டோபர், 2024: பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சிகள் ஆணையம் (BTEA) இரண்டாவது அரபு சுற்றுலா புள்ளியியல் மன்றம் 2024 இல் பங்கேற்றது, இது அக்டோபர் 14-16 க்கு இடையில் ஓமானி தலைநகரான மஸ்கட்டில் நடைபெற்றது.ஓமன் சுல்தான்ட்டில் உள்ள பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் அரபு நாடுகளின் லீக் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பல்வேறு அரபு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் நிபுணர்கள், புள்ளியியல் தகவல் துறை மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.சர்வதேச சுற்றுலா துறை. BTEA இன் கொள்கை மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குனர் திருமதி நூரா அல் சாடூன், தேசிய சுற்றுலாப் புள்ளியியல் அமைப்பை நிறுவுவதில் பஹ்ரைனின் அனுபவம் குறித்த ஆய்வறிக்கையில் பங்கேற்றார்.2015 முதல் 2024 வரையிலான சர்வதேசப் பரிந்துரைகளின்படி சுற்றுலாப் புள்ளிவிவரங்களுக்கான தேசிய அமைப்பை நிறுவுவதில் இராச்சியம் செயல்படுத்திய பணிகளின் கட்டங்களை அவர் மதிப்பாய்வு செய்தார். தற்போதுள்ள…
சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. கொட்ட போகுது கனமழை! வானிலை மையம் தந்த எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று தொடங்கி வரும் அக். 17ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் அக். 16ம் தேதி சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், தென் தமிழகத்தில் அநேக இடங்களில்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை AWS (மதுரை) 160 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து திருப்புவனம் (சிவகங்கை) 140மிமீ, சிவகாசி (விருதுநகர்), தல்லாகுளம் (மதுரை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), பெரியபட்டி (மதுரை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்) தலா 120 மிமீ மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் நிலவும் வானிலை…
மாணவர்களிடம் குட்கா, கூல் லிப்.. ஏன் குண்டாஸ் போட கூடாது! சாட்டையை சுழற்றிய நீதிபதி..முக்கிய ஆர்டர்!
மதுரை : கூல் லிப், குட்கா, புகையிலை பயன்பாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார். இதில் அதிகமாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கணேஷ் ஹான்ஸ் போன்ற புகை பொருட்களை பயன்படுத்தியதாகவும், கூல் லிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்கு பதிவு செய்து ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின் போது நீதிபதி பள்ளி மாணவர்கள் இந்த கூல் லிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மிகுந்த வேதனையாக உள்ளது. எனவே…
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு சிக்கல்! சுப்ரீம் கோர்டில் புது மனு.. பரபரப்பை கிளப்பிய மாஜி எம்பி
சென்னை: தற்போது அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியங்கள் கலைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தோடு உச்ச நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றார். எனவே மீண்டும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறியுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு வெளிவந்த…
இந்திய தூதரகம் தூதர் ஹெச்.இ. தலைமையில் திறந்த இல்லத்தை ஏற்பாடு செய்தது. திரு. வினோத் குரியன் ஜேக்கப்
இந்திய தூதரகம் தூதர் ஹெச்.இ. தலைமையில் திறந்த இல்லத்தை ஏற்பாடு செய்தது.திரு. வினோத் குரியன் ஜேக்கப், செப்டம்பர் 27, 2024 அன்று. தூதரகத்தின் சமூக நலக் குழு மற்றும் தூதரக குழு மற்றும் எங்கள் குழு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட ஓபன் ஹவுஸில் சுமார் 50 இந்தியர்கள் கலந்து கொண்டனர். தூதர் சமூக உறுப்பினர்களுக்கு ஓணம் வாழ்த்துகளை தெரிவித்தார்.மேலும், தூதரகத்தின் 24×7 ஹெல்ப்லைன் மொபைல் எண்: 39418071 என ஆள்மாறாட்டம் செய்து, தனிப்பட்ட தகவல்களைக் கோரும் அல்லது பணப் பரிமாற்றம் கோரும் ஏமாற்று அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார். தூதரக அதிகாரிகள் இந்த எண்ணிலிருந்து அழைப்புகளைத் தொடங்குவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். செப்டம்பர் 4, 2024 அன்று 16 இந்தியக் கைதிகளை அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததற்காக, தூதர் மன்னர், அவரது அரச உயரதிகாரி மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும்…
கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியானது.. துபாய் சென்று வந்தவருக்கு Mpox பாதிப்பு!
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்கு திரும்பிய நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எம்-பாக்ஸ் வைரஸ் தொற்றால் 2வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில், எம் – பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. காய்ச்சல், குளிர் காய்ச்சல் தலைவலி, வீக்கம், உடல் வலி, தசைவலி போன்றவை எம்-பாக்ஸ் வைரஸ் பரவலின் அறிகுறிகள் ஆகும். மிகத் தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படக்கூடும். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த நபர் துபாயில் இருந்து அண்மையில் கேரளா வந்துள்ளார். அவருக்கு எம்-பாக்ஸ் அறிகுறிகள் தென்பட்ட…
ஸ்டாலினை பார்த்து இப்படி நக்கலா பேச முடியுமா? அன்னபூர்ணா விவகாரத்தில் முதல்வர் மீது பாஜக பாய்ச்சல்!
சென்னை: தொழில்துறையினர் மீது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்தால் மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க வேண்டும். அதைவிடுத்து நல்லது செய்ய வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசியலுக்காக விமர்சித்து திசை திருப்ப வேண்டாம் என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது. கோவை கொடிசியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழில் துறையினர், வர்த்தகர்கள் கடந்த 11 ஆம் தேதி கலந்துரையாடினர். இதில் அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார். அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகையில், “பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி, உள்ளே இருக்கும் கிரீமுக்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி அதிகம். இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, கிரீம், ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை…
என்னவாகும் அண்ணாமலையின் நிலை.! தமிழக பாஜகவில் ரகசியமாக நடப்பது என்ன.? வெளியாகும் ஷாக் தகவல்
தமிழகமும் பாஜகவும் தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. ஒருமுறை திமுக வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து அதிமுக வெற்றி பெறும். இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக தென் மாநிலங்களில் மீது தனது கவனத்தை திருப்பியது. முதலில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த பாஜக அடுத்து கேரளா மற்றும் தமிழகத்தின் மீது பார்வை திரும்பியது. தமிழக பாஜக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றாக காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த தமிழிசையை தமிழக தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழிசை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதை தமிழக மக்களை வெகுவாக கவர்ந்தது. தமிழிசையின் செயல்பாடு மக்களோடு மக்களாக இணைந்து கட்சி பணியை சிறப்பாக செயல்படுத்தினார். தமிழகம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். பட்டி தொட்டி எங்கும் பாஜகவின் கொடி பறக்க தொடங்கியது. தாமரை மலரந்தே தீரும்…
செப்டம்பர் பிறந்தாச்சு! சென்னையில் வணிக சிலிண்டர் விலை கிடுகிடு! ஒரு சிலிண்டர் ரேட் என்ன?
சென்னை: சென்னையில் வணிக சிலிண்டர் விலை இன்று செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ரூ 38 உயர்ந்து ரூ 1855 க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் ரூ 7.50 க்கு உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை தற்போது 4 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கச்சா எண்ணெயின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்றைய தினம் ரூ 38 உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ 1855 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 6 ஆவது மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 14 கிலோ எடை கொண்ட…
அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பாஜகவில் புதிய பொறுப்பு நிர்வாகிகள் அறிவிப்பு.! யார் யார் தெரியுமா.?
அண்ணாமலையும் தமிழக அரசியலும் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டவர் அண்ணாமலை, அரசியல் களத்தில் தனது அதிரடி அரசியலின் மூலம் தமிழகம் முழுவதும் பாஜவை வளர்க்க பல்வேறு முயற்சிகை மேற்கொண்டார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்.முருகனுக்கு ஆகியோருக்கு அடுத்ததாக கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டு இளைஞர்கள் மத்தியில் பாஜகவிற்கு இடத்தை உருவாக்க முக்கிய காரணமாக அமைந்தவர் அண்ணாமலை. இவரது தலைமையின் கீழ் பாஜக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தாலும் பல தொகுதிகளில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்றது. ஒருங்கிணைப்பு குழு அமைப்பு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் குட் புக்கில் இடம்பெற்றுள்ள அண்ணாமலை, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பில் நடத்தும் படிப்பில் படிப்பதற்காக நேற்று முன் தினம் நள்ளிரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக சுமார் 4 மாதங்கள் தமிழகத்தில் பாஜக மாநில…
