Author: NEWS DESK

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்கு திரும்பிய நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எம்-பாக்ஸ் வைரஸ் தொற்றால் 2வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில், எம் – பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. காய்ச்சல், குளிர் காய்ச்சல் தலைவலி, வீக்கம், உடல் வலி, தசைவலி போன்றவை எம்-பாக்ஸ் வைரஸ் பரவலின் அறிகுறிகள் ஆகும். மிகத் தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படக்கூடும். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த நபர் துபாயில் இருந்து அண்மையில் கேரளா வந்துள்ளார். அவருக்கு எம்-பாக்ஸ் அறிகுறிகள் தென்பட்ட…

Read More

சென்னை: தொழில்துறையினர் மீது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்தால் மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க வேண்டும். அதைவிடுத்து நல்லது செய்ய வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசியலுக்காக விமர்சித்து திசை திருப்ப வேண்டாம் என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது. கோவை கொடிசியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழில் துறையினர், வர்த்தகர்கள் கடந்த 11 ஆம் தேதி கலந்துரையாடினர். இதில் அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார். அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகையில், “பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி, உள்ளே இருக்கும் கிரீமுக்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி அதிகம். இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, கிரீம், ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை…

Read More

தமிழகமும் பாஜகவும் தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. ஒருமுறை திமுக வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து அதிமுக வெற்றி பெறும். இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக தென் மாநிலங்களில் மீது தனது கவனத்தை திருப்பியது. முதலில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த பாஜக அடுத்து கேரளா மற்றும் தமிழகத்தின் மீது பார்வை திரும்பியது. தமிழக பாஜக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றாக காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த தமிழிசையை தமிழக தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழிசை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதை தமிழக மக்களை வெகுவாக கவர்ந்தது. தமிழிசையின் செயல்பாடு மக்களோடு மக்களாக இணைந்து கட்சி பணியை சிறப்பாக செயல்படுத்தினார். தமிழகம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். பட்டி தொட்டி எங்கும் பாஜகவின் கொடி பறக்க தொடங்கியது. தாமரை மலரந்தே தீரும்…

Read More

சென்னை: சென்னையில் வணிக சிலிண்டர் விலை இன்று செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் ரூ 38 உயர்ந்து ரூ 1855 க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் ரூ 7.50 க்கு உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை தற்போது 4 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கச்சா எண்ணெயின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்றைய தினம் ரூ 38 உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ 1855 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 6 ஆவது மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 14 கிலோ எடை கொண்ட…

Read More

அண்ணாமலையும் தமிழக அரசியலும் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டவர் அண்ணாமலை, அரசியல் களத்தில் தனது அதிரடி அரசியலின் மூலம் தமிழகம் முழுவதும் பாஜவை வளர்க்க பல்வேறு முயற்சிகை மேற்கொண்டார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்.முருகனுக்கு ஆகியோருக்கு அடுத்ததாக கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டு இளைஞர்கள் மத்தியில் பாஜகவிற்கு இடத்தை உருவாக்க முக்கிய காரணமாக அமைந்தவர் அண்ணாமலை. இவரது தலைமையின் கீழ் பாஜக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தாலும் பல தொகுதிகளில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்றது. ஒருங்கிணைப்பு குழு அமைப்பு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் குட் புக்கில் இடம்பெற்றுள்ள அண்ணாமலை, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பில் நடத்தும் படிப்பில் படிப்பதற்காக நேற்று முன் தினம் நள்ளிரவு லண்டன் புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக சுமார் 4 மாதங்கள் தமிழகத்தில் பாஜக மாநில…

Read More

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வின் பகுதியாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 18 ஆகஸ்ட் 2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார். https://youtu.be/ubbJR5rOrZ4 வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவில் பதிக்கப்பட்ட அதில் ஒரு நாணயத்தை திமுக செயல் உறுப்பினர்களான ஷஃபீக் மற்றும் டேவிட் ஆகியோர் பஹ்ரைனுக்கு கொண்டு வந்து, பஹ்ரைன் தமிழ் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களை பார்வையிடச் செய்தார். “தமிழ் வெல்லும் “ என்ற வாசகத்துடன் கூடிய 100 ரூபாய் நாணயம் கட்சி பாகுபாடின்றி தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் பெருமை படக்கூடிய விடயம் என கருத்து தெரிவித்த அவர் , பஹ்ரைன் வாழ் தமிழர்களின் பார்வைக்கு கொண்டு வந்த ஷபீக்…

Read More

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று அறிவித்தது. இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 2-வது மற்றும் 3-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாஜகவின் முந்தைய வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் ஶ்ரீநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் தற்போதைய பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் பாஜக தனித்தே களம் காண்கிறது. காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- சிபிஎம்- பேந்தர்ஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியும் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஜம்மு…

Read More

BTEA – மனாமா, பஹ்ரைன் இராச்சியம் (25 ஆகஸ்ட் 2024): சுற்றுலா அமைச்சரும், பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சிகள் ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மேன்மைமிகு திருமதி பாத்திமா பின்ட் ஜாபர் அல் சைராஃபி, 2024 ஆம் ஆண்டின் BTEA இன் இரண்டாம் காலாண்டு வாரியக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 2022-2026 சுற்றுலா மூலோபாயத்தின் குறிக்கோள்கள் மற்றும் தூண்களை செயல்படுத்துவது தொடர்பான சாதனைகள் மற்றும் குறிகாட்டிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்து, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுற்றுலாத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களை வாரியம் மதிப்பாய்வு செய்தது.இரண்டாவது காலாண்டில் தொடங்கப்பட்ட முக்கிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் ராஜ்யத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதில் அவற்றின் நேர்மறையான தாக்கம் ஆகியவையும் கூட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. 2022-2026 சுற்றுலா மூலோபாயத்தின் இலக்குகளை அடைய பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதிகாரசபையின் உறுதிப்பாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் துறையின் பங்களிப்பை இரட்டிப்பாக்குதல்…

Read More

அமைதியான சகவாழ்வுக்கான கிங் ஹமத் குளோபல் சென்டரின் தலைவரான டாக்டர் ஷேக் அப்துல்லா பின் அஹ்மத் அல் கலீஃபா, அமைதியான சகவாழ்வுக்கான கிங் ஹமாத் விருதை அவரது மாட்சிமை பொருந்திய மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவின் உலகளாவிய முயற்சியாக நிறுவியதை பாராட்டினார். தேசிய பட்டய நினைவுச்சின்னத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டாக்டர் ஷேக் அப்துல்லா, விருதின் மனிதாபிமான பரிமாணங்களை வலியுறுத்தினார்.அமைதியான சகவாழ்வு, கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் தீவிரவாதம் மற்றும் வெறுப்பை நிராகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பஹ்ரைனின் நீண்டகால பாரம்பரியம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவற்றிலிருந்து இந்த விருது பெறப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பில் திரு. அப்துல்லா இசா அல்மனை, டாக்டர் அல்சாடிக் ஒமர் கலஃபல்லா மற்றும் சுசில் முல்ஜிமால் ஆகியோரும் கலந்து கொண்டனர். டாக்டர் ஷேக் அப்துல்லா, அமைதியான சகவாழ்வுக்கான கிங் ஹமாத் குளோபல் சென்டரின் அறங்காவலர் குழுவின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை எடுத்துரைத்தார்,…

Read More

நியூயார்க்: இந்தியா-அமெரிக்கா உறவில் சமீப காலமாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆயுத பரிவர்த்தனையில் இரு நாடுகளும், தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவுக்கு நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தியாவின் ஆயுத கூட்டாளி என்றால் அது ரஷ்யாதான். இப்போ இல்லை.. இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது. அதற்கேற்றார்போல, ரஷ்யாவும் தரமான சம்பவம் செய்யும் ஆயுதங்களைதான் கொடுக்கும். இதனுடைய லைஃப் டைமும் அதிகம். எனவே போர் விமான இருந்தாலும் சரி, போர் ஆயுதமாக இருந்தாலும் சரி நாம் முதலில் சென்று நிற்கும் இடம் ரஷ்யாதான். ஆனால், பாதுகாப்பு விஷயங்களுக்கு ஒரே நாட்டை மட்டும் நம்பியிருப்பது என்பது புத்திசாலித்தனம் அல்ல. எனவே இந்தியா கடந்த சில ஆண்டுகளில் தனது ஆயுத கொள்முதல் தளத்தை விரிவுப்படுத்தியது. இப்படித்தான் பிரான்ஸின் ரபேல் விமானம் வாங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் தரம்…

Read More