Author: NEWS DESK

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 241 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆப்கன் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியை நோக்கி போட்டிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஒப்பீட்டளவில் இலங்கை பலமான அணியாக பார்க்கப்படும் சூழலில், அந்த அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆப்கன் அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் அமைந்தது. குறிப்பாக ஆப்கன் அணியின் பேட்டிங் கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கவனத்தை பெற்றது. தரம் வாய்ந்த இலங்கை பவுலர்களால் ஆப்கன் விக்கெட்டுகளை உடனடியாக சாய்க்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள…

Read More

தெறிக்கும் ரத்தக் காட்சிகளுடன், விக்ரம் படத்தின் மூலம் சூர்யாவின் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் அத்தனை எளிதாக யாரும் மறக்க முடியாது. முரட்டத்தனமான கதாப்பாத்திரமாக ரோலக்ஸ் கதாப்பாத்திரம் இருந்தாலும், அதனை ரசிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். இந்த நிலையில் சென்னையில் நடிகர் கார்த்தி 25 நிகழ்ச்சி, அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, கார்த்திக்கு எல்லாம் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றார். பருத்திவீரன் படம் கமல்ஹாசன் பூஜை போட்டு ஆரம்பித்தது என்றும் படம் வெளியான பின்பு கார்த்தி சரியாக பயன்படுத்தி விட்டார் என்று ரஜினி பாராட்டினார் என்று சூர்யா குறிப்பிட்டார்.

Read More

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழர் நல பேரியக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கை முறிந்ததால் சிகிச்சை பெற்று மதுரை பேங்க் காலனியிலுள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருந்தனர். இந்த நிலையில் மதுரைக்கு இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்றார். முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தார். அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பழ.நெடுமாறன் உடல்நலன் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பழ.நெடுமாறன் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் அவரிடம் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,…

Read More

சென்னை: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கவும், பாஜகவை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க எதிர்க்கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் கர்நாடகா, குஜராத், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த பொதுத் தேர்தல்கள், அதன் பின்னர் நடந்த இடைத் தேர்தல்கள் என எதிலும் பாஜகவுக்குச் சொல்லும்படியான வெற்றியை அளிக்கவில்லை. இதில் குஜராத் மாநிலம் மற்றும் சற்று விதிவிலக்கு அங்கு பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு ஆட்சியை இழந்தது. இந்த தேர்தல் முடிவு பாஜகவுக்கு ஏற்பட்ட இறங்கு முகத்தைக் காட்டுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்குத்…

Read More

டெல்லி:காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 2600 கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் இன்று (அக்.30) டெல்லியில் நடைபெற்றது.காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில்,…

Read More

கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், களமசேரி குண்டுவெடிப்பு ஒரு சோகமான சம்பவம் என்றும், முதல்வர் தன்னை வகுப்புவாத விஷம் என்று குறிப்பிட்டதை அவர் தெளிவுபடுத்தினார். கேரள அரசியிலில் ஊழல் பிரச்சனை எழுப்பும் போது தங்களை வகுப்புவாதிகள் எனக்கூறி முதல்வர் பிரனாயி விஜயன் மறைக்கப்பார்க்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹமாஸ் அமைப்பினர் கலந்து கொண்ட விவகாரத்தை குறிப்பிட்ட அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், நாசகார சக்திகளுக்கு எதிராக பேசுபவர்களை வகுப்புவாதிகள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார். இலத்தூர் சம்பவம் தீவிரவாத தாக்குதல் அல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். ஆனால், இதன் விசாரணையில் ஜாகிர் நாயக் குழுவின் பங்கு இருப்பது பின்னர் தெளிவாகியது. இந்த…

Read More

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் என 10ம் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும், மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவதற்கும் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சார்ந்த மலைவாழ் மக்கள் அரசுக்கு புதிய வழித்தடம் மற்றும் பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பேருந்து இயக்கத்தை போதகாடு பகுதியில் இருந்து பையர்நத்தம். பொம்மிடி, கடத்தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பேருந்தின் முதல் சேவையை பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் கொடி…

Read More