Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
- குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
- நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
- “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
- இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
- எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
Author: NEWS DESK
பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
பஹ்ரைன் அரசாங்கத்தின் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பான பாரதி தமிழ் சங்கம், ஸ்டார் விஷன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, ஜனவரி 16 , 2026 அன்று இந்தியன் கிளப் வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடத்த வடிவமைத்துள்ளது. இலாப நோக்கற்ற இவ்வமைப்பானது தமிழ்ச் சமூகத்தின் தேவைகளுக்கு சேவை செய்வதிலும், தமிழ்ப் பண்பாட்டு பாரம்பரியத்தை பேணிப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. https://youtu.be/FL_Oh6YddV8?si=H46oekjA1dQRZMpP கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பஹ்ரைன் இந்தியன் கிளப் வளாகத்தில் இது தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது . “தமிழர் திருநாள்” என்றும் “உழவர் திருநாள்” என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் இந்த தைப்பொங்கல் திருவிழா உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பெருமக்களால் மிகுந்த விமரிசையுடன் கொண்டாடப் படுகிறது . விழா நிகழ்ச்சிகள் காலை 7.30 மணிக்கு தொடங்கும். கோலப் போட்டியுடன் இது ஆரம்பமாகும். ஆண், பெண், குழந்தைகள் அனைவருக்கும் ஏற்றவாறு பல்வேறு விளையாட்டுப்…
சென்னை: “முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால், “தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும் எனவும் தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்திடும்பொருட்டு, 2026ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் “குறள் வாரவிழா” கொண்டாடிட ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வகையில், சேலம், திருச்சிராப்பள்ளி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம் / இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம்/குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நான்கு…
பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
சென்னை: தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்குச் சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகிறது. அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உலகமே சென்னையின் அழகை கண்டுகளித்த சென்னை பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தையம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி, 7ஆவது “ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை – 2023” போட்டி, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச…
கபடி வீராங்கனையான கே.எஸ்.ஐஸ்வர்யா, தமிழ்நாட்டிற்காக பல போட்டிகளில் பங்கேற்று விளையாடியவர். கொரோனா காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பின் மூலம் சினிமாவிற்குள இவர் சமீபத்தில் வெளியான ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது ‘சதுரங்கவேட்டை’ நட்ராஜ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோ கே.எஸ்.ஐஸ்வர்யா அளித்த பேட்டி ஒன்றில், “நான் சிறுவயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை. அவர் கடின உழைப்பால் எட்டிய உயரத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். புதுப்புது கதைகளங்களிலும், வித்தியாசமாக படைப்புகளைத் தரும் இயக்குனர்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இம்மாபெரும் தொழிலாளர் தின விழா, மே 1ஆம் தேதி பஹ்ரைன் கேரளா சமாஜம் உள்ளரங்கில் சிறப்புற நடைபெற்றது. STAR VISION EVENTS & MEDIA PARTNERS பாரதி தமிழ் சங்கத்துடன் இணைந்து அரசாங்க அனுமதி முறையாக பெற்று இந்நிகழ்வினை அழகான வடிவில் முன்னெடுத்தனர். இவ்விழாவில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர். தமிழ் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி திரண்டு அரங்கம் நிரம்பி வழிந்து, கட்டுக்கடங்காது இருந்தபோதிலும் ஏராளமானோர் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதிகாத்து நின்றுகொண்டே கண்டு ரசித்த உயர்பண்பு எல்லோரையும் கவர்ந்தது. இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், பஹ்ரைன் நாட்டில் தொழிலாளர்களின் அபாரமான பங்களிப்பை பாராட்டுவதும், அவர்களை மகிழ்விப்பதும், கௌரவிப்பதுமாகும். அரசாங்க நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் அரங்கேறின . பஹ்ரைன் அரசாங்க நிறுவனங்களிலிருந்து உயர் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். வளைகுடா அண்டைய நாடுகளிலிருந்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்…
“காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியதாக மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார். வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா ராஜ்யசபாவில் பேசியுள்ளார். வக்பு வாரிய மசோதா வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர். வக்ஃப் மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசுகையில், “நாட்டின் நலனுக்காகவே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ஃப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துகளைப் பெற்றனர்.…
இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
டெல்லி: மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிப்பதால் கடுமையாக எதிர்க்கிறேன் என்று லோக்சபாவில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்பி தெரிவித்தார். லோக்சபாவில் துரைவைகோ எம்பி பேசியதாவது: இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை, ஜனநாயக மாண்புக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை, மதசார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் எதிர்க்கிறேன். இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாத் வ அக்ரளுல்லாஹ கர்ளன் ஹஸ்னன் யுளா அஃபு லஹும் வலஹும் அஜ்ருன் கரீம் என்று அரபி மொழியில் திருகுர்ஆன் வசனம் 57:18 சொல்கின்றது. ஏழை எளிய ஆதரவற்றோருக்கு தானதர்மம் உள்ளிட்ட தொண்டுகளை செய்வது, இறைவனுக்கே கடன் கொடுப்பதற்கு சமமானது என்பதுதான் இதன் பொருள். திருகுர்ஆனில் உள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளை செயல்படுத்துவதற்கும், இஸ்லாமியர்கள் இறை பணிகளை மேற்கொள்வதற்கும் தான் வக்பு…
எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
மனாமா, பிப்ரவரி 10 (பி.என்.ஏ): அவரது கம்பீரமான கிங் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவின் ஆதரவின் கீழ் மற்றும் அவரது ராயல் ஹைனஸ் இளவரசி சபீகா பிண்ட் இப்ராஹிம் அல் கலீஃபா, அவரது கம்பீரமான மன்னர் மற்றும் தேசியத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர்வேளாண் மேம்பாட்டுக்கான முன்முயற்சி (என்ஐஏடி), பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 – 23 அன்று சாகீரில் உள்ள கண்காட்சி உலக பஹ்ரைனின் ஹால் 3 இல் நடைபெறும். https://www.youtube.com/watch?v=ldYa7hv0-5c&ab_channel=StarvisionNewsTamil உலகளாவிய விவசாயத் துறை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பஹ்ரைனின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த கண்காட்சி இராச்சியத்தின் முதன்மை விவசாய நிகழ்வு என்று நியாட் பொதுச் செயலாளர் ஷெய்கா மராம் பிண்ட் ஈசா அல் கலீஃபா வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சி வெற்றியின் நீண்ட பதிவை உருவாக்குகிறது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார், நிறுவினார், நிறுவினார், நிறுவினார்தோட்டக்கலை மற்றும் விவசாய தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகளைக் காண்பிப்பதற்கான ஒரு…
ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் அறிவித்த கோவை ஐடி நிறுவனம் – ஒவ்வொருவருக்கும் ஆண்டு சம்பளத்தில் 50%
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவை ஐடி ஹப்பாக உருவாகி வருகிறது. ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு ஐடி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கோவை மாவட்டம் ஐடி ஹப்பாக உருவாகி வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் டைடில் பார்க், எல்காட் வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல வெளிநாட்டு நிறுவனங்கள் கோவையை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் கோவையில் 17.17 ஏக்கர் பரப்பளவில் புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் கோவை, மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு கோவை.கோ (Kovai.co) என்கிற முன்னணி ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தான் தற்போது தங்களிடம் பணியாற்றி வரும். 140 ஊழியர்களுக்கு மொத்தம் டாலர் 1.62 மில்லியன்.. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 14.5…
டெல்லியில் சரிகிறது ஆம் ஆத்மி ஆட்சி.. அரியணை ஏறும் பாஜக.. 2013க்கு பின் ஆட்சி மாற்றம் – எக்சிட் போல்
டெல்லி: டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஆம் ஆத்மி வெறும் 10-19 இடங்களில் வென்று தோல்வி அடையும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் 2013க்கு பின் முதல்முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் 2013ல் இருந்து ஆம் ஆத்மியை தவிர வேறு கட்சி ஆண்டது இல்லை. இலவச மின்சாரம், ஊழலற்ற நிர்வாகம் என்று பல காரணங்களால் அந்த கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது, துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது, அதிஷி முதல்வராக பதவி ஏற்பு என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஆட்டம் கண்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். 51-60 இடங்களில் பாஜக…
